ADVERTISEMENT
ADVERTISEMENT
புதுச்சேரி தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட தினத்தையொட்டி, தமிழ் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து உள்ளிட்ட தமிழ் சங்க நிர்வாகிகள் வெங்கட்டா நகர், தமிழ் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து புதுச்சேரி தமிழ் சங்கத்திற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கொடியை தலைவர் வி.முத்து ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் செயலாளர் பாவலர் சீனு.மோகன்தாஸ், துணை தலைவர் பாவலர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் திருநாவுக்கரசு மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Show comments