Skip to main content

விவேகானந்தருக்கு மன்னர் பாஸ்கர சேதுபதி செய்த மகத்தான உதவிக்கு மத்திய அரசு செய்ய வேண்டியது என்ன?

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வதேச மதங்களின் மாநாட்டில் விவேகானந்தர் பங்கேற்று நிகழ்த்திய உரையே அவரை உலகுக்கும் குறிப்பாக இந்தியா முழுமைக்கு அறிமுகப்படுத்தியது.
 

அந்த மாநாட்டில் விவேகானந்தர் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்காவிட்டால், அவருடைய போதனைகளுக்கு இப்போதுள்ள முக்கியத்துவம் கிடைத்திருக்காது என்று ஒரு பகுதியினர் சொல்கிறார்கள். இதுகுறித்து சில நாட்களுக்கு முன் கொரியாவில் நடைபெற்ற கொரியா தமிழ்ச்சங்க மாநாட்டில், சங்கத்தின் தலைவர் முனைவர் ராமசுந்தரம் தெரிவித்த விவரங்கள் மிகவும் முக்கியமானவை.

america chicago vivekananda korea tamil sangam

அதாவது விவேகானந்தருக்கு அந்த முக்கியமான வாய்ப்பை வழங்கியவர் ராமநாதபுரம் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதி. சிகாகோ மாநாட்டில் பங்கேற்க மன்னர் பாஸ்கர சேதுபதிக்கே அழைப்பு வந்திருந்தது. மன்னராக இருந்தாலும் நன்கு கற்ற, இந்தியா முழுவதும் பயணித்திருந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவராக மன்னர் இருந்தார்.

மதுரை வந்திருந்தபோது விவேகானந்தரின் உரையைக் கேட்ட மன்னர், விவேகானந்தரை சிகாகோ மாநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்தார். மன்னர் பாஸ்கர சேதுபதியின் முடிவு விவேகானந்தருக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே பெருமை சேர்த்துக் கொடுத்தது. விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் பேசிய 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெளிநாடுகளில் இந்திய தூதரகம் வழியாக நடத்தப்படும் கலாச்சார மையங்கள் அனைத்தும் விவேகானந்தர் மையங்களாக பெயர் மாற்றப்பட்டது.

america chicago vivekananda korea tamil sangam

அந்த மையங்களில் விவேகானந்தரின் புகழுக்கும் இந்தியாவின் பெருமைக்கும் காரணமாக இருந்த மன்னர் சேதுபதியின் படத்தையும் இடம்பெறச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கொரியா தமிழ்ச்சங்க தலைவர் ராமசுந்தரம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதுமட்டுமல்ல, விவேகானந்தர் சிகாகோ பயணத்தை முடித்துக்கொண்டு பாம்பன் திரும்பியபோது அதன் நினைவாக மன்னரால் எழுப்பப்பட்ட நினைவுத் தூணில் மன்னரால் “சத்தியமேவ ஜெயதே” என்ற வாசகம் பொறிக்கப்பட்டது. வாய்மையே வெல்லும் என்ற அந்த வாசகம்தான் இந்திய அரசின் முத்திரையில் பொறிக்கப்பட்டது.

america chicago vivekananda korea tamil sangam

மன்னர் பாஸ்கர சேதுபதியின் ஆன்மிக ஞானத்தை மதித்தே அவரை ராஜரிஷி என்று விவேகானந்தர் அழைத்தார். இதெல்லாம் நடந்த வரலாறு. ஆனால், விவேகானந்தர் வாழ்க்கையில் பாஸ்கர சேதுபதிக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்து, விவேகானந்தர் மையங்களில் அவருடைய படத்தை இடம்பெறச் செய்யவேண்டும் என்பதே ராமசுந்தரத்தின் கோரிக்கை.

அவருடைய கோரிக்கையை தமிழக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே கொரியா தமிழ்ச்சங்கத்தின் வேண்டுகோள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

“விவேகானந்தர் வார்த்தையை மெய்ப்பிப்பவர் மோடி” - அண்ணாமலை

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

Vivekanandas words come true Modi Annamalai

 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தை நேற்று தொடங்கினார். இந்த நடைப்பயணத்தை நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நடைபயணத் தொடக்க விழாவில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “இந்த நடைபயணம் வெறும் அண்ணாமலையின் நடைபயணம் அல்ல. இது ஒவ்வொரு பா.ஜ.க தொண்டனின் நடைபயணம். கூட்டணி கட்சியினரின் நடைபயணம். இதனை ஒரு வேள்வியாக கருதுகிறோம். விவேகானந்தர் கால்நடையாக கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வரை நடந்தே வந்தார். அதை போல் அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய விவேகானந்தர் ராமேஸ்வரம் வந்து இறங்கினார். அப்போது அவர், பாரத மாதா இனி தூங்கப்போவதில்லை என்று கூறினார். அந்த வார்த்தையை மெய்ப்பட வைத்தவர் பிரதமர் மோடி. இன்றைக்கு உலகம் முழுவதும் இந்தியாவைப் பெருமைப்பட வைக்கிறார். இந்தியாவின் வளர்ச்சியை உன்னிப்பாக உலக மக்கள் கவனித்து வருகின்றனர். கோடிக்கணக்கான மக்களைப் பசி என்ற கோரப்பிடியில் இருந்து மோடி மீட்டு வருகிறார். கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த அரசு வீடு கட்டிக்கொடுத்துள்ளது.

 

பிரதமர் மோடி ஒரு சாதாரண மனிதன். அதனால், தற்போது இந்தியாவில் சாதாரண மக்களுக்கான ஆட்சி நடத்தி வருகிறார். குஜராத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதன் இந்த 9 ஆண்டு கால ஆட்சியில் இந்திய மக்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். பாரத தாய் போல் தமிழ்த்தாயும் இனி விழித்து எழ வேண்டும்.  தி.மு.க அரசு வெறும் ஊழல் செய்யும் அரசாகத்தான் இருக்கிறது. ஒரு குடும்பம் மட்டும்தான் சம்பாதித்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கிடைக்காத திட்டங்கள் எல்லாம் மோடியின் ஆட்சியில் கிடைத்திருக்கின்றன.

 

மோடி மனதளவில் தமிழராக வாழ்கிறார். இந்தியாவிலேயே வேறு எந்தப் பிரதமரும் தமிழர்களின் புகழையும் கலாச்சாரத்தையும் பிரதமர் மோடி அளவுக்கு உயர்த்திப் பிடித்தது கிடையாது. அவர் தமிழை மிகவும் நேசிக்கிறார். மோடியின் முகவரியாக அவரது திட்டங்கள் எல்லாம் அனைத்து வீடுகளிலும் உள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை நிரந்தரமாக இருக்கக்கூடிய பிரதமர் நம்மிடம் இருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் திங்கட்கிழமை நிதிஷ் குமார் பிரதமர், செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி பிரதமர், புதன்கிழமை கே.சி.ஆர். பிரதமர் என ஒவ்வொரு நாளும் ஒரு பிரதமர்கள் வருவார்கள். கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவை தனது மூச்சாக, கருவாக செயல்படுகின்ற மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். மூன்றாவது முறையாக அவர் பிரதமராக அமரும் போது இந்தியா மூன்றாவது பொருளாதார நாடாக உயரும். அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். இந்த யாத்திரைக்கு தமிழகத்தின் அரசியலை மாற்றக்கூடிய சக்தி இருக்கிறது” என்று கூறினார்.