/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/250_8.jpg)
தமிழ் அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்களின் பயன்தரும் கண்டுபிடிப்புகளை உற்பத்திப் பொருட்களாக மாற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உலகத்ததமிழ் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவரிடம் கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
கொரியா தமிழ்சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் உலகத் தமிழ் வர்த்தகக் கூட்டமைப்பு (World Tamil Chamber of Commerce WTCC) மற்றும் உலகத்தமிழ் வம்சாவழி அமைப்பு (Global Organization of Tamil Origin) ஆகியவற்றின் தலைவர் செல்வகுமாருடன் கலந்துரையாடினார். அப்போது, தமது அமைப்பு தமிழரின் தொழில் மற்றும் வணிகம் மேம்பட உலகளாவிய ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டு வருவது குறித்த தகவல்களை செல்வக்குமார் தெரிவித்தார். தமிழ் தொழிலகங்களின் உற்பத்திப் பொருட்களை அறிமுகம் செய்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், இளைஞர்களை பயிற்றுவித்து புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதும், தமிழ் தொழிலதிபர்கள் சந்திக்கும் இடர்களைச் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு எடுத்துச் சொல்லி தீர்வு கிடைக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பணிகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவருடைய தொடர்புக்கு நன்றி தெரிவித்த முனைவர் இராமசுந்தரம் தமிழ் அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்களின் பயன்தரும் கண்டுபிடிப்புகளை மக்களுக்குப் பயன்படும் வகையில் உற்பத்திப் பொருட்களாக்கும் வேலைத்திட்டத்தை உலகத்தமிழ் வர்த்தக அமைப்பு அமைப்பு முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதற்காக தமிழ் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துகொள்ளும் சந்திப்புக்களை ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். அவ்வாறான சந்திப்புகள் புதிய தொழில்நுட்பம் - புதிய வாய்ப்புகள் (New Technology – New Opportunities) மற்றும் தொழில்நுட்பம் உருவாக்குவோருக்கான முதலீட்டு உதவி (Venture Capital Investments) என்கிற வகையில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புப் பெருக உதவும் என்ற இராமசுந்தரம், இத்தகைய வேலைத் திட்டங்களுக்கு கொரிய தமிழ்ச் சங்கம் இயன்ற ஒருங்கிணைப்பு உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)