ADVERTISEMENT

பெண்ணை வைத்து பாலியல்தொழில்;தலைமறைவான காவலர்!!

09:04 PM Nov 28, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் ஒரு பெண்ணை வைத்து காவலர் ஒருவர் பாலியல் தொழில் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதுதொடர்பாக தலைமறைவான காவலரையும் சம்பந்தப்பட்ட பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை ரசாக் தோட்ட சாலை, நேரு தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் ஒரு பெண்ணை தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கோயம்பேடு தலைமை காவலர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த காவலரின் பெயர் பார்த்திபன் என்பதும் தெரியவந்துள்ளது.

அந்த பெண்ணிடம் வரும் வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்தப் பெண் மற்றும் காவலர் பார்த்திபன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.,தலைமறைவான இருவர் மீதும் விபச்சாரம், கொலை மிரட்டல் மற்றும் வழிப்பறி ஆகிய வழக்குகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த பெண் தங்கியிருந்த வீடு முதலில் என் எஸ் கே நகர் இரண்டாம்தெரு எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது ரசாக் தோட்ட சாலை, நேரு தெருவில் பாலியல் தொழில் நடந்த வீட்டை கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரையும் பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

காவலர் பொறுப்பில் உள்ளவரே இப்படி பாலியல் தொழில் செய்திருக்கும் செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT