ADVERTISEMENT
ADVERTISEMENT
புதுச்சேரியில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் நூறடி சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆசிரியர் சகாய தோனி வளவன் என்கிற டேனியல் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மாணவி தரப்பு மற்றும் ஆசிரியரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சகாய தோனி வளவன் என்கிற டேனியலை பணிநீக்கம் செய்ததாக அந்த தனியார் பள்ளி நிர்வாகம் தற்பொழுது அறிவித்துள்ளது.
Show comments