Skip to main content

கைதிகள் பணம் கையாடல்: ரூ.5 லட்சம் டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் பணத்தில் 8.77 லட்சம் ரூபாய் கையாடல் செய்த வழக்கில், முன்ஜாமின் கேட்டு சிறை ஊழியருக்கு, 5 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 


சேலம் மத்திய சிறையில் 850 க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளுக்கென சிறைச்சாலைக்குள் கேண்டீன் இயங்கி வருகிறது. சிறைத்துறை வழங்கும் உணவு தவிர, கைதிகள் தங்களுக்குப்பிடித்த தின்பண்டங்களை சொந்த செலவில் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 

 

 highcourt verdict


இதற்காக கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், அவர்களின் இதர செலவுகளுக்காக பணம் கொடுத்துச் செல்வார்கள். மேலும், தண்டனை கைதிகளுக்கு சிறைச்சாலைக்குள் வேலைகளும் வழங்கப்படும். அதற்காக அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது.

 


இவ்வாறு கைதிகளுக்காக உறவினர்கள் கொடுத்துவிட்டுச் செல்லும் தொகை மற்றும் ஊதியத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கடந்த மாதம் புகார் எழுந்தது. இந்த முறைகேடு குறித்து விசாரிக்குமாறு கைதிகளும் திடீரென்று சிறைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 


இதுகுறித்து விசாரிக்குமாறு சிறைத்துறை ஏடிஜிபி உத்தரவிட்டார். அதிகாரிகள் ஆய்வில், கைதிகளின் பணம் 8.77 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைதிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பிரிவில் பணியாற்றி வரும் பரமத்தி வேலூரைச் சேர்ந்த ஊழியர் வெற்றிவேல் என்பவர்தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. 

 


இதையடுத்து வெற்றிவேல் மீது அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த முறைகேட்டில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடந்து வருகிறது. 

 


இந்நிலையில் வெற்றிவேல், முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு திங்கள் கிழமை (டிச. 10) விசாரணக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யும்படி உத்தரவிட்டார். இதற்கு அவகாசம் வழங்கும்படி மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதற்கு போலீசார் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை புதன்கிழமைக்கு (டிச. 12) ஒத்தி வைக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.