ADVERTISEMENT

'முன் மாதிரி கிராம விருது'- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

11:11 PM Dec 18, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் முன் மாதிரி விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சிறந்த ஊராட்சியைத் தேர்ந்தெடுக்க மாநில அளவில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் தலைமையிலும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சியென அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சிகளைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் கிராமங்களுக்கு தலா 7.5 லட்சம் ரூபாயும், மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று சிறந்த ஊராட்சிகளுக்கு தலா 15 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திடக்கழிவு மேலாண்மை, நெகிழி ஒழிப்பு, சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளைத் தேர்வு செய்து விருது வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT