இந்த நிலையில் தான் பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக பிடிக்கப்பட் சிலரை போலிசார் விடுவித்தனர். ஆனால் அப்போதே சுமார் 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போது குறிபபிட்ட சமுதாய தலைவர்கள் கைது நடவடிக்கை எடுக்க கூடாது என்று பேச்சாவார்த்தை நடத்தினார்கள்.
அதன் பிறகு சம்மந்தப்பட்ட ஆடியோவை தேர்தல் ஆதாயத்திற்காக தஞ்சை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நிறுத்தப்பட்டவரை வெற்றி பெறச் செய்ய அதே சமூக இளைஞர்களே சிங்கப்பூரில் இருந்து பேசி தஞ்சை மாவட்டத்திற்கு அனுப்பி அங்கிருந்து சமூக வலைதளங்கள் மூலம் மற்ற பகுதிகளுக்கு பரப்பிவிடப்பட்டதை கண்டறிந்த போலிசார் சம்மந்தப்பட்டவர்களை சிங்கப்பூரில் இருந்து வரவழைத்து கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் சம்மந்தப்பட்ட ஆடியோவை பரப்பியதாகவும் ஆடியோ வெளியாக காரணமாக இருந்ததாகவும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு போராட்டங்கள் குறைந்தது. இந்தநிலையில் தான் வியாழக்கிழமை இரவு முதல் பொன்னமராவதில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி ஆலவயல், வார்ப்பட்டு, தேவன்பட்டி, கொல்லுப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 22 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது நடவடிக்கைகள் தொடர வாய்ப்புகள் உள்ளதால் மீண்டும் பொன்னமராவதி பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.