ADVERTISEMENT

திருவாரூரில் பொங்கல் விழா போட்டிகள்!

07:02 PM Jan 18, 2019 | selvakumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூரில் திமுக சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.


தமிழகம் முழுவதும் பொங்கல் விழாவை விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உழவர்களின் தோழனான மாடுகளை அலங்கரித்து அறுசுவை உணவு படைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மாட்டு பொங்கலை கொண்டாடினர்.

இந்நிலையில் திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட 22வது வார்டில் திமுக சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த பொங்கல்விழாவில் கோலப்போட்டி, ஓட்டபந்தயம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினி சின்னா பரிசுகளை வழங்கினார். விழாவில் வார்டு செயலாளர் நந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT