ADVERTISEMENT

வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து 5 பேர் காயம்!

01:03 PM Apr 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் முதுகுளத்தூரில் வாக்குசாவடியில் மேற்கூரை இடிந்து 5 வாக்காளர்கள் காயமடைந்துள்ளனர். கண்டிலான் வாக்குச்சாவடியில் மேற்கூரை இடிந்து காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT