ADVERTISEMENT

பொள்ளாச்சி பாலியல் வழக்கு... திருநாவுக்கரசு பண்ணைவீட்டில் சிபிஐ சோதனை

04:44 PM May 14, 2019 | kalaimohan

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ கையிலெடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, வசந்த், சதீஸ், சபரீசன் என்ற நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஐந்தாவதாக மணிவண்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்காசுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிபிஐ போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சாலையை அடுத்த சின்னப்பம்பாளையம் பகுதியிலுள்ள அவனுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் கருணாநிதி தலைமையிலான 4 சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

20 நிமிடத்திற்கு மேலாக அந்த வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் திருநாவுக்கரசு வீட்டில் நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கையை சிபிஐ வசம் சமர்ப்பித்த பிறகு கடந்த 27 ஆம் தேதி சிபிசிஐடி இந்த வழக்கை ஒப்படைத்தது.இந்நிலையில் தற்போது முதல்முறையாக திருநாவுக்கரசு வீட்டை சிபிஐ சோதனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT