Skip to main content

பள்ளி மாணவர்களை தனது நாற்காலியில் அமர்த்தி அழகு பார்த்த காவல் ஆய்வாளர்

Published on 20/11/2022 | Edited on 20/11/2022

 

The police inspector made the schoolgirls sit in his chair and saw their beauty

 

காவல் நிலையத்தில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவியர்களில் காவல்துறை அதிகாரியாக வருவேன் என கூறிய பள்ளி மாணவியர்களை தனது நாற்காலியில் அமர்த்தி காவல் ஆய்வாளர் ஒருவர் அழகு பார்த்த நிகழ்வு திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சின்னாளபட்டியில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் பேசிய வன்கொடுமை தடுப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைத்த அம்பாத்துரை காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், மாணவர்களிடத்தில் படித்த பின்பு நீங்கள் எந்த வேலைக்கு தேர்வு செய்து படிக்க போகிறீர்கள் என கேள்வி கேட்டார். அப்போது மாணவர்கள் சிலர் தங்கள் காவல்துறை மற்றும் மருத்துவம் உட்பட  பல துறைகளை கூறினார்கள். காவல்துறை தேர்வு செய்த மாணவர்களை பாராட்டிய காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், வருங்காலத்தில் நீங்களும் இதுபோல் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய இடத்திற்கு வர வேண்டும் எனக் கூறியதோடு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

 

The police inspector made the schoolgirls sit in his chair and saw their beauty

 

பின்னர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ., எழுத்தர், போலீஸ் ஆகியோரின் பணிகள் புகார் மனு தொடர்பாக போலீஸ் நடவடிக்கை குறித்து இன்ஸ்பெக்டர் விளக்கினார். நிறைவாக காவல்துறையை தேர்வு செய்த மாணவ, மாணவிகளை தனது இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினார். அப்போது அங்கிருந்த மாணவ-மாணவியர்கள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விழிப்புணர்வு முகாமில் சின்னாளபட்டி சார்பு ஆய்வாளர்கள் கோமதி, டேவிட், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ஜெயக்குமார், ரவிமுருகன், பாலசுப்ரமணி, நல்லதம்பி, பயிற்சி சார்பு ஆய்வாளர் ஜெயசேகர், தலைமைக் காவலர்கள் உமா, ஜெயபாலா, முதல் நிலை காவலர்கள் பாப்பாத்தி, ஜெயப்ரியா மற்றும் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மேலாளர் பாரதிராஜா, சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.