ADVERTISEMENT
ADVERTISEMENT
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, உளுத்திமடை கிராமத்தில் உள்ள முனியப்பசாமி கோவிலில் உடையார் என்பவர் பூசாரியாக இருக்கிறார். செங்கமடையைச் சேர்ந்த காளீஸ்வரன் அக்கோவிலில் உள்ள முனியப்பசாமி சிலையை உடைத்ததோடு அரிவாளால் சாமியின் முகத்தைக் கொத்தி சேதப்படுத்தவும் செய்திருக்கிறார்.
இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட பூசாரி உடையார் பதறியடித்துக் கோவிலுக்குச் சென்றபோது, சிலையை உடைத்த காளீஸ்வரன் “இங்கிருந்து போறியா? உன்னையும் சாமி சிலையைப் போட்டு கொல்லவா?” எனச் சத்தம் போட்டு கல்லைத் தூக்கியிருக்கிறார். அதற்குள் உளுத்திமடை கிராமத்தினர் அங்குத் திரண்டு வர, காளீஸ்வரன் தப்பி ஓடியுள்ளார். பிறகு கிராமத்தினர் கலந்து பேசி கட்டனூர் காவல்நிலையத்தில் புகாரளிக்க, காளீஸ்வரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Show comments