கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. இதில் ஒரு பெண்ணின் கதறல் சத்தம் கேட்டு தமிழ்நாடே அதிர்ச்சியில் உறைந்தது. இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மேலும் இந்த வழக்கை டிஜிபி ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றினார். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து, காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது ரீயாசுதீன்( 21), முகமது யூசுப் ( 21), வசந்தகுமார் (19), கமர்தீன் (19), முகமது சபீர் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் வந்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது.