ADVERTISEMENT

20% இடஒதுக்கீடு- முதல்வருடன் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சந்திப்பு!

02:17 PM Dec 01, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் பா.ம.க. கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி

ADVERTISEMENT

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி பா.ம.க. நடத்தி வரும் போராட்டத்தால் சென்னையில் தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பல்லவன் இல்லம் அருகே நடந்த போராட்டத்தில் பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்றார். அப்போது பேசிய, அன்புமணி ராமதாஸ் எம்.பி., 'இட ஒதுக்கீடு போராட்டம் அரசியல் பிரச்சினை அல்ல, உரிமை பிரச்சினை' என்றார்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சந்தித்தார். அப்போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20% இடஒதுக்கீடு அளிக்க முதல்வரிடம் வலியுறுத்தியதாக தகவல் கூறுகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT