ADVERTISEMENT

ஃபோட்டோ ஷூட் விபரீதம்... நீரில் மூழ்கிய இளைஞர்களை தேடும்பணி தீவிரம்! 

09:15 AM Feb 02, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் ஃபோட்டோ ஷூட்டுக்குச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கிய நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணி இரண்டாம் நாளாக இன்று (02.02.2021) காலை தொடங்கியுள்ளது.

சென்னை விமானநிலையம் அருகே திருசூலத்தில் உள்ள லம்பா கல்குவாரி குட்டையில் ஃபோட்டோ ஷூட் எடுக்க 4 இளைஞர்கள் சென்ற நிலையில், நான்கு பேரில் தினேஷ் என்ற இளைஞரும், ஆகாஷ் என்ற இளைஞரும் குட்டையில் மூழ்கினர்.

நீரில் மூழ்கியவர்களை நேற்று முதல் தீயணைப்பு துறையினர் தேடிவரும் நிலையில், இன்று காலை மீண்டும் தேடுதல் பணி துவங்கியுள்ளது. ஃபோட்டோ ஷூட் எடுக்கச் சென்ற இளைஞர்கள் கல்குவாரி குட்டையில் மூழ்கிய சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT