ADVERTISEMENT

பெட்ரோல் நிலையத்தைச் சூறையாடிய கும்பல்... வெளியான சிசிடிவி காட்சி! 

11:34 PM Jun 24, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் இளைஞர்கள் மதுபோதையில் தகராற்றில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம், ஜானகிபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு சென்ற ஆறு பேர் பெட்ரோல் நிரப்பிவிட்டு நீண்ட நேரமாகியும் அங்கிருந்து வாகனத்தை எடுக்காமல் இருந்துள்ளனர். பெட்ரோல் நிலைய மேலாளர் கார்த்திக் வாகனத்தை அப்புறப்படுத்தும் படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மேலாளரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த லாரி ஓட்டுநரையும் தாக்கிய கும்பல், பெட்ரோல் நிலையத்தில் இருந்த பொருட்களை சூறையாடியது.

இது தொடர்பான, காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT