Skip to main content

பரோட்டா கேட்டுத் தராததால் தாக்குதல்; திமுக பிரமுகர் கைது

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Assault because Barota did not given; DMK person arrested

 

விழுப்புரம் மேல்மலையனூர் பகுதியில் பரோட்டா கடையில் ஓசியில் பரோட்டா தராததால், திமுக பிரமுகர் ஒருவர் கடை ஊழியர்களைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக திமுக நிர்வாகி மற்றும் அவருடைய கூட்டாளி என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே முனீஸ்வரன் செட்டிநாடு என்ற உணவகம் இருக்கிறது. சரவணன் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில், மேல் மலையனூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஆசைத்தம்பி என்பவர் அவருடைய நண்பர் சிவராஜ் என்பவருடன் நேற்று உணவகத்திற்கு வந்து காசு இல்லாமல் பரோட்டா கேட்டிருக்கிறார். அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் உரிமையாளர் எதுவும் கூறாமல் அவருக்கு 100 ரூபாய் பெறுமானமுள்ள  பரோட்டாவை கொடுத்திருக்கிறார். அதை வாங்கிச் சென்ற ஆசைத்தம்பி சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே ஹோட்டலுக்கு வந்து பரோட்டா கேட்டிருக்கிறார்.

 

அப்பொழுது, முதலில் கேட்டதற்கே மதித்து பரோட்டா கொடுத்தேன். மீண்டும் கேட்டால் எப்படி என்று முடியாது என சரவணன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி மற்றும் கூட்டாளி சிவராஜ் சேர்ந்து, 'எங்களுக்கு பரோட்டா தராமல் எங்கள் ஊரில் எப்படி கடை நடத்த முடியும் என்று பார்க்கிறேன்' என அங்கிருந்த ஊழியர்கள், கடையில் இருந்தவர்கள் என அனைவரையும் கொடூரமாகத் தாக்கினர். இந்த  காட்சிகள் அனைத்தும் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் சரவணன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிசிடிவி பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு திமுக பிரமுகர் ஆசைத்தம்பி, ஆட்டோ ஓட்டுநர் சிவராஜ் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.