Skip to main content

இளம்பெண்ணின் மரணத்திற்கு பானிபூரி காரணமா? தீவிர விசாரணையில் அதிகாரிகள்! 

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

Is Panipuri the cause of the girl's death? Officers in serious investigation

 

ஈரோடு சூரம்பட்டி காந்திநகர் என்.ஜி.ஜி.ஓ. காலனி சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவருடைய மகள் 34 வயது ரோகிணிதேவி எம்.சி.ஏ. பட்டதாரி. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோகிணி தேவி அவரது சகோதரர்கள் வாங்கி கொடுத்த பானிபூரியை சாப்பிட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி ரோகிணி தேவி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

ரோகிணி தேவி உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, இறப்புக்கான காரணம் கண்டறிவதற்காக உடல் உறுப்புகள் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த சம்பந்தப்பட்ட கடையை ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூட உத்தரவிட்டனர். அதன்படி அந்த உணவகம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையில் அதிகாரிகள் 26 ந் தேதி ஈரோட்டில் உள்ள சாலையோர பானிபூரி கடைகள், உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலை, காளைமாடு சிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. காலாவதியான உணவுப் பொருட்கள் பயன்படுத்தப் படுகிறதா? என அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 

இதில் சில சாலையோர கடைக்காரர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் உள்ளது தெரிய வந்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தியது தெரியவந்தது. அவர்களுக்கு அதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கூறும் போது, “ரோகிணி தேவி பானிபூரி சாப்பிட்டு  இறந்ததாகக் கூறப்படுகிறது. அவர் பானிபூரி மட்டுமல்ல அவரது குடும்பத்தினருடன் குஸ்கா, ஆம்லெட் போன்ற உணவுகளையும் சாப்பிட்டு உள்ளார். ரோகிணி தேவியின் உடற்கூறு பரிசோதனை முடிவுகள்  வந்த பிறகே  அவர் சாவுக்கான உண்மையான  காரணம் தெரியவரும்.  இதைத்தொடர்ந்து ஈரோட்டில் சாலையோர பானி பூரி, உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டோம். இது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. பானிபூரி கடைகளில் அவர்களே உணவு தயாரித்து விற்பனை செய்கிறார்கள். எனவே பானிபூரி எப்போது தயாரிக்கப்பட்டது. அதன் காலாவதியாகும் தேதி குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தியுள்ளோம்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்