ADVERTISEMENT

படகுடன் பாம்பன் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்!!!!

09:23 AM Feb 22, 2019 | nagendran

இன அழித்தொழிப்பிற்கு அடுத்தக்கட்டமாக, தமிழர்களின் மீதான பொருளாதார அழித்தொழிப்பை முன்வைத்து, படகுடன் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து நேற்று 80க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கையின் தென்கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக்கூறி பாம்பன் பகுதியைச் சேர்ந்த கொலம்பஸ் என்பவருக்கு சொந்தமான படகையும் அதில் இருந்த படகு உரிமையாளர் கொலம்பஸ், அருள்சகாயம், ஜெயகாந்தன், அடைக்கலம், முருகன் உட்பட ஐந்து மீனவர்களையும் கைது செய்து இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 13 பேரை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் நேற்று இரவு அடைக்கப்பட்டனர். இதனால் மீனவர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT