ADVERTISEMENT
சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறைத் தண்டனை விதித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது..
ADVERTISEMENT
இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்ய உள்ளார். கரோனா காரணமாக, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் குணமாக வேண்டி துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், இது அரசியல் பதிவு அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Show comments