Skip to main content

சசிகலாவுக்கு கண்டனம் தெரிவித்த கோவை அதிமுக..!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

Coimbatore ADMK condemns Sasikala

 

கோவை புறநகர் தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இதய தெய்வம் மாளிகையில் கட்சியின் கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில், “பல கட்சிக் கூட்டணிகள், பல ஆயிரம் கோடி செலவு, பகட்டான வாக்குறுதிகள் என மக்களிடம் நாடகமாடி, தேர்தலை சந்தித்த திமுக அணியினர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது.

 

சூழ்ச்சிகள், தந்திரம், சதி செயல்கள் அனைத்தையும் முறியடித்து, அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சூழலில்... சட்டமன்றத் தேர்தலின்போது.. தான் முழுமையாக அரசியலில் இருந்து விலகியிருப்பதாக ஊடகங்கள் மூலம் சசிகலா பகிரங்கமாக அறிவித்தார்.

 

ஆனால் தொண்டர்கள் பெரும்படையும், அதிமுகவின் வலுவும், மக்களின் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும், அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதாக வினோதமான நாடகத்தை சசிகலா அரங்கேற்றிவருகிறார்” என்று பேசி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை.  சசிகலா தொலைபேசியில் சாதிய உணர்வுகளைத் தூண்டும்விதமாக பேசுவது, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வாழ்ந்துவரும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை இந்தக் கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

 

மேலும் தொண்டர்களின் உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், தங்களை வளப்படுத்திக்கொண்ட ஒரு குடும்பத்தினர் மீண்டும் அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலை விரிக்கின்றனர்.

 

மக்கள் போற்றும் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் புகழ்பெற்ற இந்தக் கட்சி தனி ஒரு குடும்பத்தின் அபிலாசைகளுக்கு அடி பணியாது. அதிமுகவிற்கும், சசிகலாவிற்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ இல்லை என்பதை இந்தக் கூட்டம் தெரிவித்துக்கொள்வதோடு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதத்திலும் செயல் பட்டு, சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய கழகத்தைச் சேர்ந்தவர்களை அதிமுகவில் இருந்து நீக்கியதை இந்த மாநகர், மாவட்டம் இருகரம் தட்டி வரவேற்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.