ADVERTISEMENT

புதுச்சேரி அருகே மது கடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் பலி! மது கடை சூறை!

02:57 PM Apr 13, 2019 | sundarapandiyan

புதுச்சேரி இடையஞ்சாவடி சேர்ந்த கணபதி என்பவர் ஆலங்குப்பம் சஞ்சீவி நகர் மது கடையில் மது குடித்துக்கொண்டிருந்தபோது அவருக்கும் மற்றொரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் மர்ம கும்பலால் கணபதி கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சஞ்சீவி நகர் மது கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

ADVERTISEMENT



அதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கோரிமேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்த மர்ம கும்பலையும் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT