ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னையை அடுத்த மாங்காட்டில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணிக்காக நடந்து சென்றபோது கால் தவறி பள்ளத்தில் விழுந்த லட்சுமிபதி (42) என்பவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பின்றி நடந்து வருவதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அண்மையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் இதேபோல் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.
ADVERTISEMENT
Show comments