இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி மீண்டும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி தொடர தனது முன்மொழிவை செய்து வந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை தனது குடும்பத்துடன் ஆந்திரா மாநிலம் திருப்பதி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி வெங்கடாஜலபதியை மனம் உருகி வேண்டியதோடு சில வேண்டுதலையும் வைத்துள்ளார்.
இதற்கிடையே ஏற்கனவே ஏழுமலையானை வேண்டியதை நிறைவேற்றுவதாக தனது மனைவியுடன் வந்த உறவினர்களிடம் திருப்பதி உண்டியலில் போடுவதற்காக கொண்டுசென்ற ரூபாய் ஒரு கோடி, மேலும் ஒரு கிலோ தங்கம், ஒரு கிலோ வெள்ளி என அனைத்தையும் திருப்பதி உண்டியலில் செலுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.
நேரடியாக உண்டியலில் செலுத்தவில்லை. அவர் சாமி தரிசனம் செய்த பிறகு அவருக்குப் பின் வந்த அவரது மனைவி உறவினர்கள் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பணத்தையும் பொருள்களையும் உண்டியலில் போட்டு வந்தனர். இதன்மூலமாக எடப்பாடி பழனிச்சாமி இன்னும் இரண்டு வருடம் தனது ஆட்சிக் காலம் நீடிக்கும் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டு வந்தார்.