ADVERTISEMENT
ADVERTISEMENT
அரியலூர் மாவட்டம் கொள்ளிடத்தில்ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 70 வயது முதியவர் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டான் அருகே விவசாயநிலத்தை பார்வையிட சென்ற குள்ளன் என்ற 70 வயது முதியவர் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் அடித்து செல்லப்பட்டார்.
அதன்பின் ஆற்றின் நடுப்பகுதியில் இருந்த ஒரு மரத்தை பற்றிக்கொண்டு பலமணிநேரம் கத்தி குரல் கொடுத்துள்ளார். அதன்பின் அங்குள்ளவர்கள் ஒருவர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருப்பதை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு பாதுகாப்பு வாசகங்களுடன் வந்த தீயணைப்பு துறையினர் அந்த முதியவரை போராடி காப்பாற்றினர்.
ADVERTISEMENT
Show comments