ADVERTISEMENT

பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

05:32 PM Sep 28, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்ற 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா பேரிடர் காலத்தில் 2019ஆம் ஆண்டு எம்.ஆர்.பி தேர்வின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 3485 செவிலியர்களை நிரந்தரமாகப் பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது எம்.ஆர்.பி. தேர்வின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT