இதில் 17 பேரை மீண்டும் அழைத்து வர முடியவில்லை. பதிவு செய்த 63 ஓட்டுகளுடன் மாலை வரை 904 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. ஓட்டுப்பதிவு முடியும் நேரம் வரை அந்த 17 பேரும் வராததால் அதிகாரிகள் எவ்வாறு கணக்கை சரி செய்வது என புலம்பிக்கொண்டிருந்தனர்.இதனையடுத்து பூத் ஏஜென்ட்டுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 17 ஓட்டுக்களை முக்கிய கட்சிகளுக்கு பகிர்ந்து கொள்ள ஏஜென்டுகளை கேட்டுள்ளனர் இதற்கு பூத் ஏஜென்ட்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் எந்த கட்சிக்கும் ஓட்டுகள் வேண்டாம் என்றால் 17 ஓட்டுக்களை பதிவு செய்தால்தான் கணக்கை முடிக்க இயலும் என கூறி உள்ளார் ஓட்டுச்சாவடி அலுவலர்.பின்பு ஏஜென்ட்டுகள் சம்மதத்துடன் 17 ஓட்டுக்களையும் 'நோட்டா'விற்கு போட்டுள்ளார்.தேர்தல் முடிந்து ஓரிரு நாட்களுக்கு பின் இந்த தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மறு ஓட்டுப்பதிவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.