ADVERTISEMENT
ADVERTISEMENT
முதலமைச்சர் ஆக வேண்டும் என்றோ அதிமுகவின் தலைவர் ஆக வேண்டும் என்றோ விருப்பமில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் தனது பண்ணைவீட்டில் தொண்டர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவினர் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் "ஜானகி அணி ஜெயலலிதா அணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருந்த நிலையில் தேர்தலில் நாம் தோல்வி அடைந்தோம். மீண்டும் நாம் சேர்ந்ததனால் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தோம். மக்களின் விருப்பம் அதிமுக ஒன்று சேர வேண்டும் என்பதே. அதில் இருந்து மாறுபட்டு நடந்தால் முதலில் மக்கள் கொடுத்த அடி மீண்டும் கொடுப்பார்கள். எனக்கு முதலமைச்சராகவோ அதிமுக தலைவர் ஆக வேண்டும் என்றோ எண்ணம் இல்லை. கட்சி ஒன்று படவேண்டும்" எனக் கூறியுள்ளார்.
Show comments