Skip to main content

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்- என்.எல்.சி. மனிதவள இயக்குனர் பேட்டி!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார பகுதியிலுள்ள 3 தாலுகாக்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 


மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க உதவி செய்ய வேண்டும் என்று என்.எல்.சி நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்ற என்.எல்.சி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து 11 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை நிறுவியது. இதனை என்.எல்.சி மனிதவள இயக்குனர் விக்ரமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். மேலும் விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 1.12  கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் கலை அரங்கத்தையும் கல்லூரி முதல்வர் கோ.ராஜவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் முன்னிலையில் விக்ரமன் திறந்து வைத்தார். 

nlc contrat labours nlc human resource director vickraman speech

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விக்ரமன், "கடலூர் மாவட்டத்தில் 62 வருடங்களாக இயங்கி வரும் என்.எல்.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், கிடைக்கப்பெறும் லாபத்தில் இருந்து 2% சதவீதம் ஒதுக்கப்பட்டு, மாவட்ட வளர்ச்சி பணிகளுக்காக பல்வேறு பகுதிகளுக்கு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் வைக்கின்ற கோரிக்கைகளை, மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன், நீர் ஆதாரத்தை பெருக்குவது, கல்வி மற்றும் சுகாதாரம் மேம்பாட்டிற்கு உதவுவது உள்ளிட்ட நடப்பு ஆண்டிற்கான பணிகளை சிறப்பான முறையில் செய்து  வருகின்றோம். மேலும் பரவனாறு கரையை பலப்படுத்துதல், வாலாஜா  ஏரியை தூர்வாரப்பட்டு, நீர் ஆதாரத்தைப் பெருக்குவது உள்ளிட்ட பணிகளும் செய்து வருகின்றோம்.  விருத்தாசலம் அடுத்த கொல்லிருப்பு கிராமத்தை தத்தெடுத்து 160 தனிப்பட்ட கழிவறைகள் கட்டப் பட உள்ளது" என்றார்.

nlc contrat labours nlc human resource director vickraman speech

மேலும், "என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். அந்த  தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும்" அவர் கூறினார்.

nlc contrat labours nlc human resource director vickraman speech

அதேசமயம் என்.எல்.சி நிர்வாகத்திடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தீவிரப்படுத்த தொழிற்சங்கத்தினர் முடிவெடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.