ADVERTISEMENT

குளிர் காரணமாக நீலகிரியில் காலை வாக்குப்பதிவு மந்தம்...!

12:23 PM Dec 27, 2019 | Anonymous (not verified)

நீலகிரி மாவட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குபதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. குன்னூர் தாலுக்கா மற்றும் கோத்தகிரி தாலுக்கா ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள தாலுக்கா ஊராட்சி ஒன்றியங்களுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு நடைப்பெற்று வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



இந்த வாக்குப் பதிவில் 177 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் , 17 கிராம ஊராட்சி தலைவர்கள், 22 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான வாக்கு பதிவு தான் தற்போது நடந்து வருகிறது. மலை பிரதேசம் என்பதால் காலையில் சற்று குளிர் அதிகம் உள்ளதால் வாக்குப் பதிவு சற்று மந்தமாகவே காணப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT