Skip to main content

திண்டுக்கல்லில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மந்தம்...!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

திண்டுக்கல்லில் உள்ள மொத்தம் 14 ஒன்றியங்களில் முதல் கட்டமாக 7 ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 13 மாவட்ட கவுன்சிலர், 144 ஊராட்சி தலைவர், 125 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 1401 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்காக 93 வாக்குச்சாவடி மண்டலங்களில் 617 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

Dindigul-Local body election-Polling slowdown

 



அவற்றில் 1160 வாக்குச் சாவடிகளும், 4840 ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 27 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 642 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 49 ஆயிரத்து 317 பெண் வாக்காளர்களும் 68 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். மொத்தமுள்ள 1160 வாக்குச்சாவடிகளில் 25 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்றும் மூன்று வாக்குச்சாவடிகள் அணுக முடியாதவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதது.

நடைபெற்றுவரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் மையங்களில் திண்டுக்கல் மாவட்ட சிறப்புதேர்தல்  அதிகாரி  டாக்டர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். வாக்கு மையங்களில் ஆய்வு செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர்   காவல்துறை பாதுகாப்புடன் ஆண், பெண், புதிய வாக்காளர்கள்  நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது  வருகின்றனர். ஒவ்வொரு வாக்காளர்களும் வார்டு உறுப்பினர் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என நான்கு ஓட்டுகள் போடுவதால் வாக்குப்பதிவு மந்தமாக இருக்கிறது.

 

Dindigul-Local body election-Polling slowdown

 



காலை 10.00 மணி நிலவரப்படி 10 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. அப்படி இருந்தும் வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் பஞ்சம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 10 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள். இதில் மம்புட்டி சின்னத்தில் பரமன் போட்டி போடுகிறார். 

ஓட்டுச்சீட்டில் 5வது இடத்தில் இருக்கிறது அந்த மம்புட்டி சின்னம். ஆனால் சின்னம் சரிவர வாக்காளர்களுக்கு தெரியவில்லை என வேட்பாளர் பரமனிடம் பலர் 
புகார் கூறியுள்ளனர். இதையடுத்து, சின்னம் சரியாக தெரியாததை பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் வேட்பாளர் பரமன் புகார் கூறி இருக்கிறார். இதனால் பள்ளபட்டி பஞ்சாயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.  

சார்ந்த செய்திகள்

Next Story

எதிரொலித்த அதிருப்திகள்; வேங்கை வயல், பரந்தூரில் பதிவான வாக்குகள் எத்தனை தெரியுமா?

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Dissatisfaction echoed; Do you know how many votes were cast in Vengai vayal, Parantur?

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் சில கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முன்னரே பகிரங்கமாக அறிவித்திருந்தது. குறிப்பாக புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது வரை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தீர்வு கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். மொத்தம் 561 வாக்காளர்களைக் கொண்ட வேங்கை வயலில் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்களிடமும் தொடர்ந்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை.

அதேபோல காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தனர். இந்நிலையில் ஏகனாபுரத்தில் தற்பொழுது வரை 17 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்களிக்க இன்னும் 30 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த வேங்கை வயல் மக்கள்  இறுதிக்கட்டத்தில் தற்போது திடீரென வாக்களிக்க திரண்டுள்ளததால் வாக்குசாவடி பரபரப்பை அடைந்துள்ளது. 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.