ADVERTISEMENT

"எனக்கு கியர் வண்டி ஓட்டத் தெரியாது அதனால...போலீஸாரை கிறுகிறுக்க வைத்த திருடன்..!"

09:40 PM Feb 24, 2019 | nagendran

ADVERTISEMENT

நெல்லை மாநகரத்திற்குட்பட்ட பகுதியில் அண்மைக் காலமாக டிவிஎஸ்-50 வண்டிகள் மட்டும் அதிகம் திருடுபோனது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததால், குற்றவாளிகளை பிடிக்க டி.சி. பெரோஸ்கான் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த படையினர் நடத்திய விசாரணையில் வல்லநாட்டை சேர்ந்த கொம்பையா (வயது 38) சிக்கினார்.

ADVERTISEMENT

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி, 14 டிவிஎஸ்-50 வாகனங்களை மீட்டுள்ளனர். 'ஏன்டா எல்லாமே டிவிஎஸ்-50 வண்டியா திருடியிருக்கே? என்று போலீஸார் கேள்வி கேட்டுள்ளனர்.

"எனக்கு கியர் வண்டி ஓட்டத் தெரியாதுங்க.. இந்த வண்டிய தான் ஓட்டத் தெரியும். அதேபோல், இந்த மாதிரி வண்டிகளை லேசுல கை மாத்திடலாம். ஒரு வண்டிக்கு 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் எனக்கு கிடைக்கும் " என்றிருக்கிறார்.

இதுவரைக்கும் கொம்பையா எத்தனை வண்டியை திருடி விற்றிருக்கிறார். அவற்றின் உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT