நெல் இரா.ஜெயராமன் இன்று (06.12 .2018) அதிகாலை 5 மணி அளவில் சென்னை தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனையில் காலமானார்.
ADVERTISEMENT
இன்று காலை 8.00 மணி முதல் 11 மணி வரை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனை அருகில் ரெத்னா நகர் 23/2, 2வது தெருவில் உள்ள திருவாரூர் செந்தூர் பாரிக்கு சொந்தமான வளாகத்தில் (செந்தூர் பாரிக்கு சொந்தமான அப்பார்ட்மெண்ட்) பொதுமக்களின் அஞ்சலிக்காக நெல் ஜெயராமனின் உடல் வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், வேன் மூலம் அவரது சொந்த கிராமமான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்திற்கு மாலை 5 மணியாவில் கொண்டு செல்லப்படும்.
ADVERTISEMENT
அவரது இல்லத்தில் நாளை (07.12.2018) பகல் 12.00 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Show comments