ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு... நால்வர் படுகாயம்!

06:38 PM Aug 25, 2019 | kalaimohan

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் கங்கை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவில் குளத்தை தூர்வாரும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதனை தூர்வாரும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் தூர் வாரும் பணி நடந்து கொண்டிருக்கும் அந்த பகுதியில் சென்று மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர். அப்போது குப்பைகள் அனைத்தும் முழுமையாக தூர்வாரபட்டிருந்ததால் அந்தப் பகுதியில் ஒரு மரப்பெட்டி ஒன்று இளைஞர் கண்ணில்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்த மர பெட்டியை எடுத்து கோவிலின் கரை பகுதியில் அமர்ந்து பெட்டியை திறக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த பெட்டி வெடித்து சிதறியது. அதிலிருந்து பால்ரஸ்கள் முக்கியமான சில இரும்பு துகள்கள் போன்றவை அருகிலிருந்த கோயில் சுவற்றின் மீதுபட்டு கோவில் சுவர்களில் காயங்கள் ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 5 நபர்களில் சூர்யா என்கின்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே குடல் சரிந்து மயக்கமுற்று கீழே விழுந்தார். ஊர்மக்கள் சத்தம்கேட்டு அலறியடித்து காயம்பட்ட அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சூர்யா என்கின்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். தற்போது மகாபலிபுரம் திருப்போரூர் இரண்டு காவல் ஆய்வாளர்கள் உட்பட ஒரு டிஎஸ்பி தலைமையில் தற்போது மானாமதி ஊராட்சி பகுதியில் முகாமிட்டு இருக்கிறார்கள். வெடித்த பொருள் என்னவென்று ஆராய வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வர வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT