Skip to main content

சென்னையில் பெருகிவரும் ரவுடிகள்..!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

 

 இன்று மதியம் (அக்.10) ஒரு மணியளவில் எழும்பூர் கோர்ட்டிலிருந்து திருவல்லிக்கேணியை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார் பெண் வழக்கறிஞர் மலர்.

அப்போது சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு அருகே வந்து கொண்டிருந்தபோது ஆட்டோவை வழிமறித்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் இருந்த மலர் மற்றும் இருவர் மீது சரமாரியாக வெட்ட உடனோ பரபரப்பான மக்கள் நடமாட்டமான பகுதி என்பதால் மக்கள் தெரித்து ஓட... டமால் என்று பயங்கர சத்ததுடன் பாம் வெடிக்க... உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இங்கு பாம் வெடித்தது என போலீசார் விரைந்தனர்.

அதேவேளையில் மோடி மற்றும் சீன அதிபர் ஜி.ஜின்பிங் நாளை வருகைக்கு ஒத்திகையில் இருந்த காவல்துறை கதிகலங்கியது. பின்னர் வழக்கறிஞர் மலரை விசாரித்தில் பிரபல ரவுடியான ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவியான மலர் என்பதும், உடன் வந்தவன் ரவுடி அழகுராஜா, மணிகண்டன் விஜயகுமார் என்பதும் தெரிய வந்தது. 

கடந்த 2018 அக்டோபர் 22 ஆம் தேதி ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அழகுராஜாவுக்கு தொடர்புள்ளது என்றும் அதற்கு பழிவாங்கவே அப்பாஸ்சின் மைத்துனன் ஷேக்கின் ஆட்களா என்று விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் மைலாப்பூரை சேர்ந்த பிரபல ரவுடி சிவக்குமாருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸ்சார் விசாரித்து வருகின்றனர்.

 

chennai city rowdies increase

 

1990 களில் ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த தோட்டம் சேகரை கொலை செய்த வழக்கில் வீரமணியுடன் மைலாப்பூர் சிவக்குமாருக்கும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. அழகுராஜாவை கொலை செய்ய அவனை கண்காணித்து வந்த ரவுடிகளையும் உளவுதுறை முன்னரே உஷார் படுத்தியது. அதன்பெயரில் மைலாப்பூர் துணை ஆணையர் ஜெயலட்சுமி சம்பவத்துக்கு முன் தினம் தான் சென்னையில் சுற்றவேண்டாம் உயிருக்கு ஆபத்துள்ளது என எச்சரித்து அனுப்பியுள்ளார். இதனால் தயாராக இருந்த அழகுராஜா தான் வெட்ட வரும்போது  வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசி தப்பியுள்ளான். மலர் மற்றும் அழகுராஜா சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். உடன் வந்த மணிகண்டன், விஜயகுமார் போலீஸ் விசாரணையில் உள்ளனர். தப்பியோடிய அரவிந்த் மற்றும் அப்புவை தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.