ADVERTISEMENT

இறந்த யானையின் தந்தங்களை வெட்டிக் கடத்திய மர்ம நபர்கள்... போலீசார் விசாரணை!

02:31 PM Jun 03, 2019 | kalaimohan

ஈரோடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டி கடத்திய நபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஈரோடு சத்தியமங்கலம் கடம்பூரில் வனப்பகுதியை ஒட்டிய பொறம்போக்கு நிலத்தில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர். இறந்து போன 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் உடலை மீட்டு மோப்ப நாயின் உதவியிடன் விசாரணையில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இறந்த ஆண் யானையின் தந்தங்கள் வெட்டப்பட்டிருந்ததால் தந்தங்களை கடத்த யானை கொலைசெய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் மீட்கப்பட்ட யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தபோது யானை குடற்புழு நோயால் இறந்தது தெரியவந்தது.

நோய்வாய்ப்பட்டு இறந்த யானையின் தந்தங்களை கடத்திய நபர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT