ADVERTISEMENT

குழந்தை பிறந்து 11 நாட்களில் தாய் இறந்த சோகம்

01:12 PM Nov 22, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பெட்டட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி அனுசியா. கர்ப்பிணிப் பெண்ணான அனுசியாவிற்கு கடந்த 10 ஆம் தேதி குன்னூரில் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

இரண்டு நாட்களுக்குப் பின் அவருக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து ஒரு நாள் ஆகியும் மயக்கம் தெளியாததால் அனுசியாவை அவரது குடும்பத்தினர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனுசியா நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அனுசியாவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், சந்தேக மரணம் என்ற பெயரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை பிறந்து 11 நாட்களில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT