ADVERTISEMENT

’மோடி அலையை ஓயவைக்க பெரிய தலை எதுவும் இல்லை’-தமிழிசை

11:44 AM Dec 11, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

’’வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறிய காங்கிரஸ் கட்சி தற்போதுமன்னிப்பு கேட்க வேண்டும். மோடி அலை ஓயவே ஓயாது. எந்த காலத்திலும் மோடி அலையை ஓயவைக்க முடியாது. மோடி அலையை ஓயவைக்க பெரிய தலை எதுவும் இல்லை.
வெற்றி வந்தால் துள்ளுவதும் இல்லை; தோல்வி வந்தால் துவண்டுபோவதும் இல்லை. நாங்கள் மிக மோசமான தோல்வியை சந்திக்கவில்லை. இந்த தோல்விகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பாராளூமன்ற தேர்தல் வெற்றிக்கு உழைப்போம்.’’என்று தெரிவித்தார் தமிழிசை சவுந்தரராஜன்.

ADVERTISEMENT

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி முன்னிலை பெற்று அக்கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. மிசோரத்தில் எம்.என்.எப். -27 கட்சி முன்னிலையில் உள்ளது.

இந்த 5 மாநில தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து எழுப்பிய கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT