ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் அதிமுகவையும் என்னை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை பொதுச் செயலாளர் பதவியை நீங்கள் கொடுத்துள்ளீர்கள் அதை பெரிதாக நான் கருதவில்லை உங்களில் ஒருவனாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். தமிழகத்தில் அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சி அமைந்துள்ளது. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் உள்ளது சாதாரண தொண்டன் சந்திரகாசன் போல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்குவார்களா? தலைமைக்கு கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால், இந்த வாய்ப்பை நீங்கள் வழங்கி உள்ளார்கள். இது அதிமுகவில் மட்டும் தான் முடியும் வேற எந்த கட்சியால் முடியாது. சாதாரண கிளை செயலாளராக உள்ள தொண்டன் முதல்வராக வர முடியும் என்றால் அது அதிமுகவில் தான் முடியும்.
சேலத்தில் ஸ்டாலின் அதிமுக 10 ஆண்டுகால ஆட்சி இருண்ட ஆட்சி என பேசி வருகிறார். இது முழு பூசணிகாயையும் சோற்றில் மறைப்பது போல் பேசி உள்ளார். அத்தனையும் பொய் நீங்கள் நடத்துவது தான் மக்கள் விரோத ஆட்சி. பத்தாண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி, நீங்கள் மக்களை சந்திப்பது இல்லை, மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் ஒரு பொம்மை முதல்வராக உள்ளீர்கள். திமுக ஜெயிக்கப்போவது இல்லை. இத்தோடு திமுகவின் சரித்திரம் முடிய போகிறது. உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்த பார்க்கிறார்கள் இது என்ன மன்னர் பரம்பரையா, இது ஜனநாயக நாடு, உங்கள் கட்சியில் எல்லாரையும் அடிமையாக வைத்துள்ளீர்கள்.
அடுத்த திமுக தலைவர் யார் என்று கூறினால் அவர்களை கட்சியை விட்டு நீக்கி விடுவார்கள். ஆனால் அப்படியில்லை அதிமுக ஜனநாயக கட்சி யார் வேண்டுமானாலும் தலைமை பதவிக்கு வரலாம். சரிசமமாக நடத்தப்படுகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்க முடியாமல் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது கோ பேக் மோடி என கோஷம் போட்ட நீங்கள் ஆளுங்கட்சியின் போது கம்பளம் விரித்து வரவேற்கிறீர்கள். அதிமுக ஆட்சியில் டெல்டா பகுதி பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. வடலூர் பெருவெளியில் 100 ஏக்கரில் விடியா அரசு சர்வதேச மையம் அமைப்பதற்கு கண்டம் தெரிவிக்கிறேன். இதற்கு மக்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.