ADVERTISEMENT
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் பல மணி நேரம் தேடியும் பிரியங்காவின் உடல் கிடைக்காததால் தீயணைப்புத் துறையினர் திரும்பி சென்றுவிட்டனர். இந்த நிலையில் இன்று பிரியங்காவின் தாத்தா கிணற்றை வந்து பார்த்தபோது, அதில் அவரது உடல் சடலமாக கிடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் வந்த போலீசார் பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments