ADVERTISEMENT

கரூரில் கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி

01:16 PM Dec 03, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி துவக்க விழா நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு கைகுலுக்கி, டாஸ் போட்டு போட்டியை துவக்கி வைத்தார்.

மேலும், வீரர்களின் வேண்டுகோளை ஏற்று கிரிக்கெட் மட்டையைப் பிடித்து பேட்டிங் ஆடினார். தலா ஒரு ஓவர் பந்துகள் வீசப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மகிழ்ச்சியுடன் விளையாடினார். அப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இன்று துவங்கி நான்கு நாட்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் 62 அணிகள் பங்கேற்கின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT