குட்கா ஊழலில் அமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதால் இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன்.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி இன்று தீர்ப்பளித்தது. இதனை அரசியல்கட்சிகள் வரவேற்றுள்ளன. தீர்ப்புக் குறித்து பேசிய ஜெ.அன்பழகன், "குட்கா ஊழலில் உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணை கோரினேன். கோரிக்கை நியாயமானது என நினைத்து உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது" என்கிறார்.
ADVERTISEMENT
சுகாதாரத்துறை தொடர்பான விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், பொது வாழ்க்கையில் இருக்க கூடியவர்கள் மீது குற்றச்சாட்டுகளும், அதுதூறுகளும் புணையப்படுவது வழக்கமான ஒன்று, கூடுதலாக துடிப்புடன் செயல்பட்டால் அதிக அவதூறுகளை பரப்புவார்கள். அவதூறுகளை பரப்புவது எதிர்கட்சிகளின் பணி, மக்கள் நலனுக்காக பணி செய்வது எங்கள் வேலை, மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என அவர் கூறினார்.
இந்த நிலையில், விழா முடிந்ததும் கோட்டைக்கு கிளம்பிய முதல்வர் எடப்பாடி, மூத்த அமைச்சர்களிடம் தீர்ப்பு குறித்து ஆலோசித்திருக்கிறார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதால் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் அரசு பதவியில் நீடிப்பது சட்டநெறிகளுக்கு முரணானது என்கிற நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரனின் பதவிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments