ADVERTISEMENT

தமிழக ஆளுநரின் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ்!

01:05 PM Oct 14, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மருத்துவ இடங்களில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதை அமல்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக ஆளுநரின் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5% இடஒதுக்கீடு வழங்குவதை, 2021- 2021 ஆம் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று (14/10/2020) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக எப்போது சட்டம் இயற்றப்பட்டது? பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள அரசியல் கட்சியினர் நீட் விஷயத்தில் ஒன்றுப்பட்டுள்ளனர். 2021- 2021 ஆம் கல்வி ஆண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5% இடஒதுக்கீடு அமல்படுத்தக்கோரும் வழக்கில் பதிலளிக்க தமிழக ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT