Skip to main content

இளைஞரின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

madurai high court order youth incident police station

 

பேரையூரில் விசாரணைக்குச் சென்று உயிரிழந்த இளைஞர் ரமேஷின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

இளைஞர் ரமேஷின் சகோதரர் சந்தோஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு இன்று (08/10/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 

 

மனுதாரர்: செப்டம்பர் 16- ஆம் தேதி போலீஸ் விசாரணைக்குச் சென்ற இளைஞர் ரமேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

 

நீதிபதி: சட்டவிரோத காவல் மரணம் என புகாரளித்த நிலையில் உடற்கூராய்வை ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை?

 

நீதிபதி: தடயவியல் அல்லாமல் சாதாரண மருத்துவர்களைக் கொண்டு உடற்கூராய்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

 

நீதிபதி: உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலேயே உடற்கூறாய்வு செய்ய வேண்டிய அவசரமும், அவசியமும் என்ன?

 

மனுதாரர்: காவல்துறையினர் சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தாக்கியதில் தனது சகோதரர் உயிரிழந்துள்ளார்.

 

நீதிபதி: பேரையூர் இளைஞர் ரமேஷின் உடலை மறுஉடற்கூராய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 13- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்