ADVERTISEMENT

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

06:54 PM Dec 20, 2019 | santhoshb@nakk…

நாளை (21.12.2019) முதல் அடுத்தாண்டு ஜனவரி 1- ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பதாக பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 27- ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜனவரி 3- ஆம் தேதியும், டிசம்பர் 30- ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜனவரி 4- ஆம் தேதி நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT


ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 21- ஆம் தேதி முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் ஜனவரி 2- ஆம் தேதி முதல் ஜனவரி 10- ஆம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT