ADVERTISEMENT

"லாஸ்லியாவிற்கு ஜூலி எவ்ளோவோ மேல்"...பிக் பாஸ்ஸால் கடுப்பான சினேகன்!

01:31 PM Sep 07, 2019 | Anonymous (not verified)

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகிய 3 பேரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த நிலையில் 75 நாட்களை நெருங்கி விட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் சேரன், லாஸ்லியா, ஷெரின், முகேன் மற்றும் கவின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக இருந்த கவிஞர் சினேகன், பிக் பாஸ் சீசன் 3 குறித்தும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிடித்தவர்கள் சேரன், வனிதா மற்றும் மாதமிதா என்று கூறியுள்ளார். மேலும் லாஸ்லியா மிகத் தெளிவாக நடிக்கிறார். சேரனின் புகழை தெரிந்த அவர், சேரனின் பாசத்தை அவர் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார் என்றும் விமர்சித்துள்ளார். அதே போல் லாஸ்லியாவிற்கு ஜூலி எவ்ளோவோ மேல் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிக் பாஸ்ஸில் வெற்றி பெற போட்டி போட்டு ஜெயிக்க முடியாமல், மக்கள் உணர்வுகளுடன் விளையாடி ஜெயிக்க முயற்சிக்கும் நரி தந்திரத்தை அவர் விட்டுவிட வேண்டும் என்று கவினுக்கும் அட்வைஸ் செய்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT