Skip to main content

"கவினின் செயல் மனிதத்தன்மை இல்லாத ஒரு செயல்" பிக் பாஸ் சாக்ஷி வெளியிட்ட அதிரடியான வீடியோ!

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி மற்றும் மதுமிதா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையே பிக் பாஸ் சில டாஸ்குகளை கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த டாஸ்க் ஒன்றில் ஒவ்வொரு போட்டியாளரும் தான் ஏன் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர் என்பதை மற்றவர்களிடம் தெரிவிக்க வேண்டும். 

 

big boss



அதே போல்  மற்ற போட்டியாளர்கள் கேள்வி எழுப்பலாம் என்று அந்த டாஸ்க்கின் விதிமுறையாக பிக்பாஸ் கூறியிருந்தார். அப்போது வனிதா தனது சக போட்டியாளரான கவினிடம் சாக்‌ஷி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கவின், சாக்‌ஷி தன்னை வைத்து கேம் விளையாடியதாகவும், அதைப் புரிந்துகொண்டதால் எனது மனதில் மாற்றம் ஏற்பட்டதாக கூறினார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்த நடிகை சாக்‌ஷி அகர்வால் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கவினிடம் நான் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். முதலில் யார் புரபோஸ் செய்தது என்று எனக்குத் தெரிய வேண்டும். நான் கவினிடம் புரபோஸ் செய்தேனா அல்லது அவர் என்னிடம் காதலை சொன்னாரா என்பது பார்வையாளர்களுக்கு முழுவதுமாக தெரியுமா? என்று தெரியவில்லை. இரண்டாவதாக பாத்ரூமில் என்கிட்ட கவின்  ரொம்ப கத்தி பேசினார். 

அதாவது என்னை சாவடிச்சுடுவேன் என்று பேசினார். என்கிட்ட  பேசுன மாதிரி வனிதா கிட பேச முடியுமா ? இல்ல மதுமிதா கிட்ட பேச முடியுமா? இல்ல வேறு யாருகிட்டயும் கவினால் இப்படி பேச முடியுமா? அந்த அளவுக்கு என்னிடம் அவர் உரிமை எடுக்கக் காரணம் என்ன? பின்பு, கல்யாண விஷயத்தை பற்றி பேசும் போது நீ எனக்கு பொருத்தமாக இருப்ப என்று கவின் தான் என்னிடம் கூறினார். அதே போல் ஷெரினிடம் அவர் பேசும்போது கூட மச்சான் இனிமேல் சாக்‌ஷி என்னுடைய வீட்டில் தான் இருப்பார். நீ சாக்‌ஷியைப் பார்க்க வேண்டும் என்றால் எங்கள் வீட்டுக்கு தான் வர வேண்டும் என்று கூறி திருமணம் வரைக்கும் எடுத்துச் சென்றது கவின் தான். ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட நினைக்காம என் மேல குற்றம் சொல்கிறார். கவின் இப்படி பேசியதை கடுமையாக விமர்சித்துள்ளார் சாக்ஷி. கவின் உன்னால் எப்படி சட்டை மாற்றுவது போல் பெண்களை மாற்றிக் கொள்ள முடிகிறது. பெண்களான எங்களால் அப்படி ஒருபோதும் மாற்ற முடியாது.   உன்னுடைய செயல் மனிதத்தன்மை இல்லாத ஒரு செயல்" என்று கூறியுள்ளார். பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளிவந்த சாக்ஷி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கனவை நோக்கி ஓடும் ‘ஸ்டார்’ கவின்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
kavin star movie trailer released

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார் கவின். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 4 பாடல்கள் முன்னரே அடுத்தடுத்து வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இதையடுத்து இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர், வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ளார்” என இயக்குநர் இளன் அவரது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிகனாக ஆக வேண்டும் என்ற கனவோடு ஓடும் இளைஞன், வாழ்க்கையில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறான், அதை எதிர்கொண்டு எப்படி ஹீரோவாக மாறினான் என்பதை காதல், காமெடி, எமோஷன் என கலந்து விரிவாக விவரிக்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. கவின் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார். இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.