ADVERTISEMENT
புதிய தமிழகம் கட்சி்யின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் கவுரமான இடங்களை ஒதுக்க முன்வரும் பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம்.
ADVERTISEMENT
பட்டியலின பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோருடன் கூட்டணி வைக்கலாம் என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இரண்டுமே நடைபெறாவிட்டால் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிகம் வாழும் தென்காசி, நெல்லை உள்பட 20 மக்களவை தொகுதிகளிலும் , ஒட்டப்பிடாரம் உள்பட 12 சட்டப்பேரவை தொகுகளிலும் அரசியல் இயக்கங்களை ஒன்றிணைத்து தேர்தல் சந்திப்பதற்கான வியூகங்களை வகுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Show comments