Skip to main content

குடிகாரனோடு வாழ முடியவில்லை...! விஷம் கலந்த உணவைக் கொடுத்து சிறுமி கொலை; தாய் தற்கொலை முயற்சி!!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

 

KRISHNAGIRI INCIDENT POLICE INVESTIGATION


கிருஷ்ணகிரி அருகே, குடும்பச் செலவுக்கு பணம் கொடுக்காமல் நித்தமும் மதுபோதையில் சுற்றித்திரிந்த கணவனுடன் வாழப்பிடிக்காமல் விஷம் கலந்த உணவை மகளுக்கு சாப்பிடக் கொடுத்து கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே புக்கசாகரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 30). லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி வெங்கடலட்சுமி (வயது 28). இவர்களுக்கு மதுமிதா (வயது 9), சுஜித் (வயது 4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். மகள் மதுமிதா, அதே ஊரில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தாள். 

 

கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. கிருஷ்ணப்பா சம்பாதிக்கும் பணத்தை குடும்பச் செலவுகளுக்கு கொடுக்காமல், மது வாங்கச் செலவிட்டு வந்துள்ளார். மேலும், குடிபோதையில் மனைவியை அடிக்கடி தாக்கி வந்துள்ளார். 

 

நவ. 7- ஆம் தேதி இரவும், அவர்களுக்குள் தகராறு மூண்டுள்ளது. இதற்கு மேலும் கணவருடன் வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்த வெங்கடலட்சுமி, தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்துள்ளார். 

 

தான் இறந்து விட்டால், தனது மகளை கணவர் சரியாகப் பார்த்துக் கொள்ள மாட்டார் எனக் கருதி அவரையும் கொன்றுவிடத் தீர்மானித்து, மகளுக்கும் விஷம் கலந்த உணவைச் சாப்பிடக் கொடுத்துள்ளார். அதன்பிறகு, தானும் அந்த உணவைத் தின்றுள்ளார். விஷ உணவை சாப்பிட்ட இருவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். 

 

மனைவியும், மகளும் மயக்கத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணப்பா மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சைப் பலனின்றி சிறுமி மதுமிதா உயிரிழந்தாள். ஆபத்தான நிலையில் உள்ள வெங்கடலட்சுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்த சம்பவத்தின்போது சிறுவன் சுஜித், பக்கத்து வீட்டுக்கு விளையாடச் சென்றிருந்ததால் அவன் விஷ உணவை சாப்பிடாமல் உயிர் பிழைத்தான். இச்சம்பவம் குறித்து பேரிகை காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.